
செய்திகள் மலேசியா
அனைத்துலக சிலம்ப போட்டியில் எந்தவொரு முறைகேடும் இல்லை: மலேசிய சிலம்ப கழகத் தலைவர் டாக்டர் சுரேஸ் விளக்கம்
கோலாலம்பூர்:
கடந்தாண்டு சிலாங்கூர் சுங்கை பீலேக்கில் நடைபெற்ற அனைத்துலக சிலம்ப போட்டி அங்கிகாரம் பெற்ற போட்டியாகும்.
மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் எம். சுரேஸ் இதனை தெரிவித்தார்.
இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் மலேசிய விளையாட்டு ஆணையம் அனுமதி பெற்று இந்த போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியை நடத்துவதற்கு ஒரு குழுவை அமைத்தோம்.
இந்த அனைத்துலக சிலம்ப போட்டி நடத்துவதற்கு இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு 44, 800 ரிங்கிட் மானியம் வழங்கியது.
இளைஞர் விளையாட்டு துறை அமைச்சை நம்ப வைத்து மானியம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.
மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவராக பதவி ஏற்றது முதல் இதுநாள் வரை எல்லா கணக்கு வழக்கு முறையாக உள்ளது.
அனைத்துலக சிலம்ப போட்டிக்காக இரண்டு லட்சத்து 20,000 ரிங்கிட்டை திரட்டினோம்.
இதில் 2 லட்சத்து 8 ஆயிரம் ரிங்கிட் செலவானது. இதை முறையாக மலேசிய விளையாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்து விட்டோம்.
இது தொடர்பாக எந்தவொரு விசாரணைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று டாக்டர் சுரேஸ் தெரிவித்தார்.
மலேசிய சிலம்ப கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவோர் மீது சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கும்.
தலைநகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 3:41 pm
கண்ணதாசன் விழாவில் டத்தோஸ்ரீ தெய்வீகன் உட்பட 5 பேர் சிறந்த சேவையாளருக்கான விருது பெற்றனர்
June 29, 2025, 2:12 pm
மாணவி மணிஷாபிரீத் கொலை வழக்கில் தொடர்புடைய 2 மாணவர்கள் இடைநீக்கம் செயப்பட்டனர்
June 29, 2025, 11:37 am