நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐந்து நாடுகளில் உள்ள துன் டாய்ம்க்கு சொந்தமான 4.5 பில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் முடக்கப்படலாம்

கோலாலம்பூர்:

ஐந்து நாடுகளில் உள்ள துன் டாய்ம்க்கு சொந்தமான 4.5 பில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் முடக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

முன்னாள் நிதியமைச்சர் மறைந்த துன் டாய்ம் ஜைனுடின், அவரது குடும்பத்தினர், பிரதிநிதிகளுடன் தொடர்புடைய சொத்துக்கள் இங்கிலாந்து தவிர வேறு ஐந்து நாடுகளில் அமைந்துள்ளன.

அவற்றின் மதிப்பு குறைந்தது 4.5 பில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தம் மீதான விசாரணையில் துன் டாய்ம் அந்த சொத்துகளை அறிவிக்கப்படத் தவறிவிட்டார்.

இதன் அடிப்படையில்  வணிக முக்கியத்துவம் வாய்ந்த உயர் மதிப்புள்ள சொத்துக்கள் எம்ஏசிசி முடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான், இத்தாலி, பிரான்சில் அமைந்துள்ள ஒரு தீவு நாடான ஜெர்சி ஆகிய ஐந்து நாடுகளில் அந்த சொத்துக்கள் உள்ளன.

அமெரிக்காவில் எம்ஏசிசியில் கண்டறியப்பட்ட சொத்துக்களில் காண்டோமினியம், வணிக கட்டிடங்கள், வங்கிக் கணக்குகள் அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

அறிவிக்கப்படாத சொத்துக்களில் ஜப்பானில் உள்ள ஹோட்டலும் அடங்கும்.
அதே நேரத்தில் இத்தாலியில் உள்ள ஷாப்பிங் மாலும் அடங்கும்.

மேலும் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் சிங்கப்பூர், ஜெர்சியிலும் கண்டுபிடிக்கப்பட்டன என வட்டாரங்கள் கூறுகின்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset