நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர்ந்த நிலையில் மதிக்கப்படும் கூட்டுறவு சங்கங்களில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்; பெருமையளிக்கிறது: டான்ஸ்ரீ சோமா

பெட்டாலிங் ஜெயா:

நாட்டில் மிகவும் உயர்ந்த நிலையில் மதிக்கப்படும் சங்கங்களில் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கமும் ஒன்றாக விளங்குவது பெருமையளிக்கிறது. 

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ சோமசுந்தரம் இதனை கூறினார்.

கூட்டுறவு சங்கம் தனது அங்கத்தினர்களுக்கு பலவிதமான சலுகைகள் நன்மைகள் வழங்குவதால் மலேசிய கூட்டுறவு ஆணையம் நமது தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தை மிகவும் உயர்ந்த நிலையில் மதிக்கப்படும் சங்கங்களில் ஒன்றாக மதிப்பீடு செய்துள்ளது.

மேலும் மலேசிய கூட்டுறவு ஆணையம் நமது தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தை 3 ஆவது இடத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளது. 

முதல் இரு இடங்களில் அரசாங்க கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதற்கு அடுத்த படியாக தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் விளங்குகிறது. 

தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் வெற்றிகரமாக வளர்ச்சிக்கு அங்கத்தினர்களின் பேராதரவு முக்கிய காரணம் ஆகும்.

தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் கடந்த 57 ஆண்டுகளாக பலவிதமான சலுகைகளை அங்கத்தினர்களுக்கு வழங்கி வருகிறது.

எந்த ஊரு நிறுவனத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் அங்கத்தினர்களின் ஆதரவு ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

பெட்டாலிங் ஜெயா அர்மாடா தங்கும் விடுதியில் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் 57ஆவது ஆண்டு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset