
செய்திகள் மலேசியா
பெர்மிம் பேரவை கூட்டத்தில் நடந்தது என்ன?: கெபிமா முதல் நிலை துணைத் தலைவர் டத்தோ உஸ்மான் விளக்கம்
கோலாலம்பூர்:
பினாங்கு லீகா முஸ்லிம் மண்டபத்தில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற பெர்மிம் பேரவையின் சிறப்பு கூட்டத்தின் செய்தி, நம்பிக்கை இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
அந்தச் செய்தியில் கெபிமா என்ற மலேசிய இந்திய முஸ்லிம் இளைஞர் அமைப்பு முதல் நிலை துணைத் தலைவர் டத்தோ சையத் ஒஸ்மான், பெர்மிம் அரசிலமைப்பின் நகலை கிழித்து, பெர்மிம் பேரவையில் இருந்து கெபிமா விலகி கொள்வதாக அறிவித்து வெளியேறினார் என்ற செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தி முற்றிலும் ஒரு தவறான செய்தியாகும். காரணம் பெர்மிம் எனபது அரசு சாரா இயங்களின் பேரவையாகும். பெர்மிம் அரசியல் கட்சி அல்ல.
அரசியல் கட்சி என்றால் அதற்கு தனி அரசியல் சம்பந்தப்பட்ட அம்சங்கள் அந்த சட்ட திட்டங்களில் இருக்கின்றது.
அதை போல் அரசு சாரா இயக்கம் என்றால் அதற்கு தனி சட்ட திட்டங்கள் வழி நடத்துவதற்கு இருக்கின்றது.
டத்தோ சையத் ஒஸ்மான், கிழித்தது அரசியலமைப்பின் நகலையா அல்லது பெர்மிம் பேரவையின் சட்ட திட்டங்களின் நகலையா? இதில் எது உண்மை! பதில் கூறவும்.
இந்த வித்தியாசங்கள் கூட தெரியாமல் பெர்மிம்யை வழி நடத்தி வருகிறார்கள்.
டத்தோ சையத் ஒஸ்மான் பெர்மிமின் அரசிலமைப்பின் நகலை கிழித்தார் என்று தவறான செய்தி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நான் கிழித்தது பெர்மிம் அமைப்பின் சட்ட திட்டங்கள் அடங்கிய நகலை மட்டுமே. அதாவது அந்த பேரவையின் வழி நடத்தக்கூடிய சட்ட திட்டங்களின் நகலை தன் கிழித்து அதிருப்தி வெளிப்படுத்தி விலகினேன்.
இந்த சூழ்நிலை ஏற்படுவதற்கு முழு காரணம் பெர்மிமின் தலைமைத்துவமே முக்கிய காரணமாகும்.
பெர்மிம் பேரவை பொறுப்பாளர்களின் செயல் திட்டங்களில் நம்பிக்கை இழந்ததால் கேள்விகள் எழுப்பினேன். முறையான பதில்கள் கிடைக்காததால் இதை அக் கூட்டத்தில் செய்ய வேண்டியிருந்தது.
பெர்மிம் சட்டத் திட்டங்களில் உள்ள நேர்மாறான கருத்துகளுக்கு எதிராக கெபிமா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
அதுமட்டுமின்றி பாரபட்சம் பார்க்கக்கூடிய சங்கமாக பெர்மிம் அமைப்பு மாறிவிட்டது. ஒருதலைப்பட்சமாக நடந்து வருகிறது. என்ன தான் பெர்மிம் சில மாற்றங்களைச் செய்திருந்தாலும், அது அமைப்பின் சட்ட திட்டங்களில் ஜனநாயக நடைமுறைகளுக்கு இன்னும் முரணாகவே உள்ளது. இதை குறித்து நான் கேள்வி எழுப்பினேன்.
பெர்மிமின் கீழ் உள்ள அனைத்து அரசு சாரா இணைக்கப்பட்ட அமைப்புகளின் சமத்துவத்தையும் தன்மையையும், உறுதி செய்வதற்காகவும் மேலும் ஒரு அமைப்பு அரசு சாரா நிறுவன கூட்டணிகளைக் கையாள்வதில் நியாயம், சமத்துவக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பாராபட்சம் இல்லாமல் அனைத்து அரசு சாரா இயக்கங்களும் தங்களின் பரிந்துரைகளையும் கருத்துகளையும் முன் வைக்க நியாயமான இடம் வழங்கப்பட வேண்டும்.
பெர்மிம் பேரவை சட்ட திட்டங்களை அமல்படுத்துவதில் ஏற்பட்ட அநீதியின் அடிப்படையில் கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்.
நீதிக்காக நான் குரல் கொடுக்க முயற்சித்தாலும், எனது சில கருத்துகளுக்கும் பங்குக்கும் உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை.
பெர்மிம் பேரவை சிறப்பு கூட்டத்திற்கு வந்தவர்கள் பல விதமான திடுக்கிடும் உண்மைகளை பற்றி பேசினார்கள்.
அதில் கெபிமாவுக்கு எதிராக நடத்தப்படும் சதிகளை பற்றி சில நல்லுள்ளங்கள் இந்த கூட்டத்தின் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.
இவ்வளவு விஷயங்கள் எங்களுக்கு தெரிய வந்த பிறகு இனி பெர்மிமின் பேரவையில் அங்கம் வகிக்கவும் இணைந்து பணியாற்றவும் விருப்பமில்லை என்று டத்தோ சையத் ஒஸ்மான் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-பாரத்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 11:35 pm
கோல சிலாங்கூர் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
June 28, 2025, 5:30 pm
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்புவேன்: சிவக்குமார்
June 28, 2025, 3:08 pm