
செய்திகள் மலேசியா
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்புவேன்: சிவக்குமார்
கோலாலம்பூர்:
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து மக்களவையில் நிச்சயம் கேள்வி எழுப்புவேன்.
முன்னாள் மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் இதனை கூறினார்.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பின் சிகை அலங்காரம், ஜவுளி, நகைக்கடைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்களுக்கான பெர்மிட் பெறப்பட்டது.
இதனால் இந்த மூன்று தொழில் துறையிலும் நிலவிய அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சிகை அலங்கார சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் மிகப் பெரிய எண்ணிக்கையிலான பெர்மிட் யாருக்கு கொடுக்கப்பட்டது என தெரியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஆக இந்த அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து நிச்சயம் மக்களவையில் கேள்வி எழுப்புவேன்.
காரணம் இத் தொழில் துறையை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகள் போராடி இந்த பெர்மிட்களை பெற்றனர்.
அது நிச்சயம் அவர்களுக்கு பயனளிக்க வேண்டும் என்று சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 11:35 pm
கோல சிலாங்கூர் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
June 28, 2025, 3:08 pm