நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசாவில் அடுத்த வாரம் போர்நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை 

வாஷிங்டன்: 

காசாவில் அடுத்த வாரம் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு ஓர் உடன்படிக்கை கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். 

அந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருவது குறித்து அனைத்துலக சமூக பெரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. 

காசா மக்களுக்குக் கொண்டு செல்லப்படும் உணவுகளையும் இஸ்ரேல் படையினர் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் பசி, பஞ்சம் காசா மக்களை வாட்டி வதைக்கிறது. 

காசாவில் மீண்டும் அமைதியை நிலைநாட்டவும் அங்கு போர்நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்கா விருப்பம் கொள்வதாக டிரம்ப் கூறினார். 

இஸ்ரேல்-ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வந்தது போல காசா விவகாரத்தைத் தீர்க்க அமெரிக்கா முனைப்பு கொண்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset