நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஆர்எஸ்எம் மாணவர் பகடிவதை சம்பவம்: மேலும் இரண்டு மாணவர்கள் கைது

பெசுட்:

எம்ஆர்எஸ்எம் மாணவர் பகடிவதை சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெசுட் மாவட்ட போலிஸ் தலைவர் அசாமுடின் அகமது அபு இதனை தெரிவித்தார்.

மாரா அறிவியல் கல்லூரியில் இரண்டாம் படிவ மாணவர் ஒருவர் பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக மேலும் இரண்டு மாணவர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

இதே சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறும் மற்றொரு 14 வயது மாணவரிடமிருந்து போலிசாருக்கு இரண்டாவது புகார் கிடைத்துள்ளது. 

வியாழக்கிழமை பிற்பகல் 3.58 மணிக்கு பெசுட் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பெசுட்டில் உள்ள கல்லூரியில் ஆண்கள் விடுதியில் ஜூன் 24 இரவு 11.30 மணியளவில் நடந்த சம்பவத்தில் அதே மாணவரால் தான் கொடுமைப்படுத்தப்பட்டதாக இரண்டாவது பாதிக்கப்பட்டவர் கூறினார்

இதனை அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset