நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டயர் வெடித்த வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பிள்ளை கார் மோதி மரணம்: ஜாசினில் சம்பவம்

ஜாசின்:

நெடுஞ்சாலையில் டயர் வெடித்த வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பிள்ளை கார் மோதி மரணமடைந்தது.

ஜாசின் மாவட்ட போலிஸ் தலைவர் முகமது ருஸ்லி மாட் இதனை உறுதிப்படுத்தினார்.

இன்று காலை வடக்கு - தெற்கு விரைவுச் சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் கி.மீ 189.1 இல் இந்த விபத்து நிகழ்ந்தது.

காலை 8 மணியளவில் 12 வயது  ஐரிஸ் சோஃபியா முகமது சித்திக் கான் பயணித்த டொயோட்டா வெல்பயர்  காரின் டயர் வெடித்தது.

இதனால்  கட்டுப்பாட்டை இழந்து கார்  நடுவில் உள்ள சாலை தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் பாதிக்கப்பட்டவர்  இருந்து தூக்கி வீசப்பட்டு எதிர் பாதையில் சென்ற ஹோண்டா சிட்டி கார் மோதிய பிறகு காயமடைந்தார்.

கடும் காயங்களுக்கு இலக்கான அவர் மரணமடைந்தார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset