நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் கணவன், மனைவி மரணம்: இரு பிள்ளைகள் காயமடைந்தனர்

கப்பாளா பாத்தாஸ்:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் கணவன், மனைவி மரணமடைந்த வேளையில் இரு பிள்ளைகள் காயமடைந்தனர்.

பினாங்கு தீயணைப்பு,  மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் இதனை கூறினார்.

தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு - தெற்கு விரைவுச் சாலையின் கிலோ மீட்டர் 127.8 இல் அவர்கள் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது.

இந்த  விபத்து தொடர்பாக தனது துறைக்கு காலை 7.51 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.

விபத்தில் நான்கு குழந்தைகளுடன் வந்த புரோட்டான் வீரா வாகனமும், 35 வயது நபர் ஓட்டிச் சென்ற புரோட்டான் சாகா வாகனமும் சம்பந்தப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த விபத்தில், புரோட்டான் வீராவின் ஓட்டுநரான 33 வயது நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், அவரது 31 வயது மனைவிக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டு மரணமடைந்தார்.

அவர்களது ஆறு, எட்டு வயதுடைய இரண்டு குழந்தைகள் லேசான காயமடைந்தனர். அதே நேரத்தில் புரோட்டான் சாகாவை ஓட்டி வந்த நபருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே பாதிக்கப்பட்ட அனைவரையும் பொதுமக்கள் மீட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset