நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிறிஸ்டியானோ ரொனால்டோ 2027ஆம் ஆண்டு வரை அல் நசர் அணிக்காக விளையாடுவார்

ரியாத்:

கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி கிளப்பான அல் நசருடன் இரண்டு வருட புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இது அவர் தனது 42ஆவது பிறந்தநாள் வரை சவூதி அரேபியாவில் தங்குவதை உறுதிப்படுத்துகிறது.

தற்போது 40 வயதாகும் போர்த்துகல் கேப்டன் அவர் மென்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து பரபரப்பான விலகலுக்குப் பிறகு 2022ஆம் ஆண்டு டிசம்பரில் ரியாத் கிளப் அணியில் இணைந்தார்.

அல் நசருடனான அவரது முந்தைய ஒப்பந்தம் ஜூன் மாத இறுதியில் காலாவதியாகவிருந்தது

ஆனால் புதிய ஒப்பந்தத்தின் மூலம், ரொனால்டோ குறைந்தது இரண்டு சீசன்களுக்கு கிளப்பில் தொடர்ந்து இருப்பார்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ரொனால்டோ பதிவிட்டதாவது,

ஒரு புதிய அத்தியாயம் மீண்டும் தொடங்குகிறது. அதே ஆர்வம், அதே கனவு. 

ஒன்றாக வரலாற்றை உருவாக்குவோம் என கூறியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset