நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

5 சதங்கள் அடித்தும் தோல்வி: 148 வருட டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணியின் மோசமான சாதனை

லண்டன்:

இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

கடந்த 148 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவைத் தவிர வேறு எந்த அணியும் ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்து தோல்வியடைந்ததில்லை.

முன்னதாக, இங்கிலாந்தின் லீட்சில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 

6 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து இந்திய அணி ஆல்-அவுட் ஆனது.

இதனையடுத்து 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி  2-ஆவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்களைக் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset