நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்பு: பத்துமலை

ஷாஆலம்:

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி 100 அணிகள் பங்கேற்கவுள்ளன.

அக் கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை இதனை அறிவித்தார்.

சிலாங்கூர் – கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டி 21ஆம் ஆண்டாக  நடைபெறுகிறது.

இப்போட்டி வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெறும்.

சிலாங்கூர் கால்பந்து சங்கம், சிலாங்கூர் – கூட்டரசுப் மாநில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றம், மஇகா ஆதரவில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

இம்முறை மாணவர்கள் பிரிவில் 68 குழுக்களும் மாணவிகள் பிரிவில் 32 குழுக்களும்  பங்கேற்கிறது.

ஆக மொத்தம் இம்முறை 100 குழுக்கள் பங்கேற்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு நமச்சிவாயம் கிண்ணமும்  ரொக்கமும் பரிசாக வழங்கப்படும்.

பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு ரவீந்திரன் கிண்ணமும் ரொக்கமும் பரிசாக வழங்கப்படும்.

இந்த போட்டி வெற்றி பெறுவதற்கு சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின்   உதவித் தலைவர் டத்தோ சுகுமாறன், மஇகா இளைஞர் விளையாட்டு பிரிவு தலைவர் அன்ட்ரூ டேவிட், சிலாங்கூர் மாநில மஇகா விளையாட்டு பிரிவு தலைவர் டத்தோ பதி, சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் சேகர் சந்திரன், பச்சையப்பன் ஆகியோருக்கு பத்துமலை நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே இன்று ஷா ஆலம் சுங்கை ரெங்கம் தமிழ்ப் பள்ளி மண்டபத்தில்  குலுக்கல் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் குணா, கென்னத் கண்ணா, செயலாளர் குணசேகரன்,  போட்டி ஏற்பாட்டுக் குழு இயக்குனர் ராமச்சந்திரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset