செய்திகள் உலகம்
துபாயின் மிகப்பெரிய விசா மோசடி: 21 குற்றவாளிகளுக்கு 25 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம் விதித்த நீதிமன்றம்
துபாய்:
துபாயின் மிகப்பெரிய விசா மோசடி வழக்குகளில் ஒன்றில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு துபாய் குடியுரிமை மற்றும் வதிவிட நீதிமன்றம் (Citizenship and Residency Court) 25.21 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ரெசிடென்சி விசாக்களில் மக்களை நாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இந்தக் குழு போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. ஆனால், விசாக்களைப் பெற்ற பிறகு, அவர்களின் நிலையை சட்டப்பூர்வமாக்க உதவாமல் நிறுவனங்களை மூடிவிட்டனர்.
துபாயின் ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) இந்த மோசடியைக் கண்டுபிடித்து பொது வழக்குரைஞர் அலுவலகத்திற்குத் தகவல் அளித்துள்ளது.
விரிவான கண்காணிப்பு, ஆய்வுகளுக்குப் பிறகு, அந்த நிறுவனங்களுக்கு உண்மையான அலுவலகங்கள் இல்லை என்றும், சட்டவிரோதமாக விசாக்களைப் பெறுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மூத்த அட்வகேட் ஜெனரலும் குடியுரிமை, ரெசிடென்ஸ் வழக்குரைஞர் பிரிவின் தலைவருமான டாக்டர் அலி ஹுமைத் பின் காதெம் கூறுகையில், விசாரணையில் தவறான முகவரிகளைப் பயன்படுத்தி 385 விசாக்களை வழங்கிய 33 போலி நிறுவனங்கள் அடங்கும் என்று வெளிப்படுத்தியுள்ளார்.
அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்ட பிறகு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் 21 நபர்களையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சமூகத்தையும் வேலைச் சந்தையையும் பாதுகாக்க, குடியிருப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று டாக்டர் பின் காதெம் எச்சரித்துள்ளார்.
ஆதாரம்: Khaleej
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 4:07 pm
ஹார்முஸில் ஈரான் கப்பலை கைப்பற்றிய ‘யுஎஸ் மரைன்ஸ்’: பதிலடிக்கு தயாராகும் தெஹ்ரான்
April 20, 2026, 4:03 pm
அமெரிக்க போர்க் கப்பல் மலாக்கா நீரிணை வழியாகச் சென்றது
April 20, 2026, 10:38 am
புளோரிடாவில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம்
April 20, 2026, 10:21 am
போரின் விளைவு: வான்வழித் தாக்குதலால் முடங்கிய 20 விமானங்கள்
April 19, 2026, 6:57 pm
கியூபாவை கைப்பற்ற போவதாக டிரம்ப் மிரட்டல் பேச்சு: மெக்சிகோ, பிரேசில், ஸ்பெயின் கடும் கண்டனம்
April 19, 2026, 10:12 am
குவிந்து கிடந்த பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள்: குற்றச் செயல்களின் கூடாரமாகிறதா திரினிடாட்?
April 18, 2026, 2:16 pm
சர்வதேச அரங்கில் தீவிரமாக செயல்படும் பிரபோவோ சுபியாண்டோ
April 18, 2026, 11:42 am
