நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து - கம்போடியா எல்லை பிரச்சனை: கம்போடியா எல்லையை மூட தாய்லாந்து அரசு உத்தரவு

பேங்காக்:

கம்போடியா எல்லையை மூட தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் மாணவர்கள், மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டு இருப்பதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

தாய்லாந்து கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை நிலவி வருவதையடுத்து தாய்லாந்து அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

இதற்கிடையே கடந்த மாதம் எல்லை பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்தது.

இதில் ஒரு கம்போடிய வீரர் கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளின் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து தாய்லாந்திலிருந்து காய்கறிகளயும் பழங்களையும் இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது.

அதேபோல் தாய்லாந்து திரைப்படங்களும் நாடகங்களும் ஒளிபரப்பவும் கம்போடியாவில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset