செய்திகள் உலகம்
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் காட்டுமிராண்டித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழப்பு
காசா:
ஈரானுடன் இஸ்ரேல் போரிட்டு வரும் நிலையிலும் காசாவில் இஸ்ரேல் இராணுவம் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதலை தொடர்கிறது.
இந்நிலையில் மத்திய காசாவின் சலா அல்-தின் சாலையில் உணவுப் பொருளுக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிப் படைகளும் டிரோன்களும் நேற்று தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நுசேரத் அகதிகள் முகாமில் அமைந்துள்ள அவ்தா மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது, “உணவுப் பொருள் லாரிகளை பாலஸ்தீனர்கள் நெருங்கிச் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 25 பேர் இறந்தனர். 146 பேர் காயம் அடைந்தனர்.
இவர்களில் 62 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இவர்கள் காசாவில் உள்ள பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 1:33 pm
லெபனான் தெற்கில் இஸ்ரேல் தாக்குதல்: மருத்துவ பணியாளர்கள் பலி
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
