செய்திகள் உலகம்
எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம்; எங்கள் நடவடிக்கை சகோதர நட்பு நாடான கத்தாரின் உன்னத மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை: ஈரான் அறிக்கை
டெஹ்ரான்:
ஈரான் எந்த சூழ்நிலையிலும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, தேசிய பாதுகாப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அமைதியான அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் அப்பட்டமான ராணுவ தாக்குதல், சர்வதேச சட்டத்தின் மீறலைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் திட்டமிடலின்படி ஆபரேஷன் பெஷாரத் ஃபத்தாவின் மூலம் கத்தாரில் உள்ள அல்-உதெய்த் ராணுவ தளத்தை சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலுடன் குறிவைத்துள்ளோம்.
இந்த தளம் அமெரிக்க விமானப்படையின் தலைமையகமாகவும், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க பயங்கரவாத ராணுவத்தின் மிகப்பெரிய சொத்தாகவும் உள்ளது.
ஆயுதப் படைகளில் உள்ள எங்கள் தேசத்தின் மகன்களின் தீர்க்கமான இந்த நடவடிக்கை பற்றிய செய்தி வெள்ளை மாளிகைக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் இஸ்லாமிய குடியரசு, எந்த சூழ்நிலையிலும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, தேசிய பாதுகாப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது.
இந்த நடவடிக்கை எங்கள் நட்பு, சகோதர நாடான கத்தார் அதன் உன்னத மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
February 14, 2026, 7:05 pm
பிரான்சில் குழந்தையின் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த தாய் கைது
February 14, 2026, 4:41 pm
2 சிசுக்களைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொன்ற தாய்
February 14, 2026, 12:42 pm
ஷாங்காயில் மாபெரும் சாலை பிளப்பு: பீதியில் மக்கள்
February 14, 2026, 12:38 pm
பாரிஸில் பதற்றம்: கத்தி ஏந்திய நபர் போலிசார் சுட்டுக் கொலை
February 14, 2026, 10:23 am
$6 மில்லியன் மோசடி: 231 பேரிடம் சிங்கப்பூர் போலிசார் விசாரணை
February 13, 2026, 6:16 pm
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறைகள்: பல்கலைக்கழகத்தில் இருவர் உயிரிழப்பு
February 13, 2026, 1:19 pm
இஸ்தான்புலில் இரட்டை கொலை அதிர்ச்சி: விமான நிலையத்தில் இரு சந்தேகநபர்கள் கைதாகினர்
February 13, 2026, 1:17 pm
