செய்திகள் வணிகம்
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
புதுடெல்லி:
அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் இந்திய ரூபாயின் மதிப்பு சரியலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமை (20 ஜூன்) இந்திய ரூபாயின் மதிப்பு 0.6 விழுக்காடு சரிந்து, ஒரு அமெரிக்க டாலருக்கு 86.58 ரூபாய் என்ற நிலையை எட்டியது.
நேற்று முன்தினம் (21 ஜூன்) அமெரிக்கா ஈரானின் அணுச்சக்தித் தளங்களைத் தாக்கியது.
அதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கூறியுள்ளது.
போர் மோசமாகக்கூடும் என்ற அச்சத்தில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அது இன்னும் உயரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை 3 டாலர் முதல் 5 டாலர் வரை அதிகரிக்கக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அதனால் இந்திய ரூபாயும் இந்தியப் பங்குகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் ஏற்றுமதிகளில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு 87.50 ரூபாய் என்ற நிலையை எட்டலாம் என்று கூறப்படுகிறது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
December 8, 2025, 2:40 pm
ஈப்போவில் aA கிலாசிக் ஹோம் 3 வது கிளை நிறுவனத்தை நடிகை ஸ்ரீ திவ்வியா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்
December 6, 2025, 6:44 pm
MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
ஆர்சிபி அணி படத் தயாரிப்பு நிறுவனத்திடம் விலை பேசப்படுகிறது?
November 14, 2025, 4:21 pm
உணவு தயாரிக்கும் தொழில்துறையில் பீடுநடை போடும் பிரான்சிஸ் மார்ட்டின்
November 11, 2025, 2:35 pm
பெரோடுவா மின்சார கார் அறிமுகம்; தேசிய விழா பட்டியலில் உள்ளது: பிரதமர்
November 5, 2025, 3:47 pm
