
செய்திகள் வணிகம்
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
புதுடெல்லி:
அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் இந்திய ரூபாயின் மதிப்பு சரியலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமை (20 ஜூன்) இந்திய ரூபாயின் மதிப்பு 0.6 விழுக்காடு சரிந்து, ஒரு அமெரிக்க டாலருக்கு 86.58 ரூபாய் என்ற நிலையை எட்டியது.
நேற்று முன்தினம் (21 ஜூன்) அமெரிக்கா ஈரானின் அணுச்சக்தித் தளங்களைத் தாக்கியது.
அதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கூறியுள்ளது.
போர் மோசமாகக்கூடும் என்ற அச்சத்தில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அது இன்னும் உயரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை 3 டாலர் முதல் 5 டாலர் வரை அதிகரிக்கக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அதனால் இந்திய ரூபாயும் இந்தியப் பங்குகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் ஏற்றுமதிகளில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு 87.50 ரூபாய் என்ற நிலையை எட்டலாம் என்று கூறப்படுகிறது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm