நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

துபாய் விமானங்களை ரத்து செய்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 

சிங்கப்பூர்:

துபாய் விமானப் பயணங்களை நாளை மறுநாள் (25 ஜூன்) வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரத்துச் செய்துள்ளது.

மத்திய கிழக்கு வட்டாரத்தின் பதற்றநிலையைக் கருத்தில்கொண்டு அந்த முடிவை எடுத்துள்ளதாக நிறுவனம் சொன்னது.

மொத்தம் 6 பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள பயணிகளைத் தொடர்புகொள்ளவிருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சொன்னது.

பயணிகள் பணத்தைத் திரும்ப பெற விண்ணப்பிக்கலாம் அல்லது மாற்று விமான ஏற்பாடு செய்யப்படுவதற்குக் காத்திருக்கலாம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.

மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமென்றாலும் நிலைமை மாறலாம் என்பதால் மேலும் சில விமானப் பயணங்களும் பாதிக்கப்படலாம் என்று அது சொன்னது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏற்கெனவே நேற்று (22 ஜூன்)  வளைகுடா நாடுகளுக்கான விமானப் பயணங்கள் ரத்துச் செய்தது.

இஸ்ரேல் - ஈரான் பூசலில் அமெரிக்காவும் இறங்கியதை அடுத்து, உலகெங்கும் உள்ள விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கைத் தவிர்க்க முற்படுகின்றன.

ஈரானின் அணுச்சக்தித் தளங்களை அமெரிக்கா தாக்கியதால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களை எந்த நேரத்திலும் ஈரான் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset