நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயர்வு 

வாஷிங்டன்:

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடிரென புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்தத் தாக்குதலால் மேற்காசியிலிருந்து கிடைக்கப் பெறும் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஒரு கலன் Brent கச்சா எண்ணெய் விலை 5.7 விழுக்காடு உயர்ந்து 81.40 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யட்டுள்ளது. 

இது கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும்.

இதே நேரத்தில், வெஸ்ட் டெக்ஸஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலையும் 4 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்து ஒரு கலன் 75.98 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.

Fordow, Natanz மற்றும் Isfahan ஆகிய ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததையடுத்து இந்தக் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியது.

இதன் விளைவாக, உலகத்தின் மொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய கடல்வழி வழித்தடமான ஹார்மூஸ் நீர்வழியை ஈரான் மூடலாம் என்ற பயம் நிலவுகிறது.

இந்தக் கடல்வழி மூடப்பட்டால் கச்சா எண்ணெய் விலை 120–130 USD வரை உயரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் 

இதனால், உலகளாவிய பணவீக்கம் (inflation) ஏற்படலாம்.

மேலும், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும், குறிப்பாக ஆசியாவின் முக்கிய எரிசக்தி இறக்குமதி நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset