நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல்- ஈரான் சண்டை முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்பார்ப்பு

தெஹ்ரான்: 

மத்திய கிழக்கில் இஸ்ரேல்- ஈரான் ஆகிய நாடுகள் சண்டையிட்டு வரும் நிலையில் இந்த பிரச்சனை நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும். 

வெறும் போர்நிறுத்தம் மட்டும் இந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். 

கடந்த ஐந்து நாட்களாக, இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கு இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. 

இரு நாடுகளின் தலைநகரங்களிலும் ஏவுகணைகள் கொண்டு தாக்கும் காணொலிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இரு நாடுகளும் எந்தவொரு சண்டை நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளில் இறங்கவில்லை. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் அதிகரித்துள்ளது. 

ஈரான் அரசு தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது மாபெரும் குற்றமாகும் என்று அனைத்துலக சமூகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset