
செய்திகள் மலேசியா
மூத்த கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்
ஈப்போ:
மலேசிய இந்திய கலைஞர் அறவாரியத்தை( யாசி) மறைந்த துன் ச.சாமிவேலு தொடக்கி வைத்தார். கலைஞர்கள் வாழும் காலத்தில் அவர்களை சிறப்பிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக இந்த அறவாரியம் உருவாக்கப்பட்டது என்று பேராக் கலைஞர்களின் யாசி பொறுப்பாளர் எ.லோகநாதன் கூறினார்.
ஆனால், அண்மையில் கடந்த மாதம் தலைநகரில் நடைபெற்ற விருந்துபசரிப்பு நிகழ்வில் சுமார் 31 உறுப்பினர் அல்லாத கலைஞர்களை யாசி சிறப்பித்தனர். வெறும் 15 உறுப்பினராகவுள்ள கலைஞர்களை சிறப்பித்தனர். இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. மூத்த கலைஞர்கள் அதிக எண்ணிக்கை கையில் உள்ளனர். அவர்களை ஓரங்கட்டுவது எந்த வகையில் நியாயம் என்று பேராக் இந்திய கலைஞர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாக யாசி அறவாரியம் பொதுக்கூட்டத்தை நடத்தவில்லை. ஆகையால், முறைப்படி ஆண்டுக்கூட்டம், கணக்கறிக்கை மற்றும் இதர செயல்நடவடிக்கை குறித்து பொதுக்கூட்டத்தில் சமர்பிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2018 ம் ஆண்டில் நடைபெற்ற யாசி விருந்து விழா நிகழ்வில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்து இருவர் அல்லது மூவர் தேர்வு செய்யப்பட்டு, சுமார் 31 கலைஞர்கள் சிறப்பிக்கப்பட்டனர். சிறப்பிக்கப்பட்ட அனைவருக்கும் 1000 ரிங்கிட் பணமுடிப்பும் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நாட்டில் நலிந்த கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டு யாசி அறவாரியம் உருவாக்கப்பட்டது. அத்துடன், இறந்த கலைஞர்களுக்கு காப் புறுதி வாயிலாக 10 ஆயிரம் ரிங் கிட் வழங்க மறைந்த துன் சாமிவேலு ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது அவை அனைத்தும் காணாமல் போய்விட்டதாக எ.லோகநாதன் வருத்தமாக தெரிவித்தார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 5:08 pm
உலகின் முதலிட ரப்பர் உற்பத்தியாளராக மாற மலேசியா இலக்கு கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ ஜொஹாரி
June 17, 2025, 5:07 pm
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை வரண்ட, வெப்பமான வானிலையை ஏற்படுத்தும்: மெட் மலேசியா
June 17, 2025, 5:06 pm
பெக்கான் அம்னோ இளைஞர் கூட்டத்தில் நஜிப் வழக்கின் முன்னேற்றங்கள் முக்கிய விவாதமாக இருக்கும்
June 17, 2025, 5:05 pm
வறுமை குறித்த பயத்தில் எந்தவொரு மலேசியரும் முதுமை அடையக்கூடாது: பிரதமர்
June 17, 2025, 5:04 pm
ஆப்டோமெட்ரி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும்: ஜூல்கிப்ளி அஹ்மத்
June 17, 2025, 4:56 pm
முதியோர் பராமரிப்பை மேம்படுத்த மலேசியா சுகாதார முதலீட்டை அதிகரிக்கிறது: பிரதமர் அன்வார்
June 17, 2025, 3:49 pm
மஇகா முன்னாள் தலைவர் பழனிவேலுவின் மறைவுக்குப் பிரதமர், துணைப் பிரதமர் இரங்கல்
June 17, 2025, 3:24 pm