நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வறுமை குறித்த பயத்தில் எந்தவொரு மலேசியரும் முதுமை அடையக்கூடாது: பிரதமர்

கோலாலம்பூர்:

வறுமை குறித்த பயத்தில் எந்தவொரு மலேசியரும் முதுமை அடையக்கூடாது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மக்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதற்கு ஏற்ப, மலேசியா தனது கவனத்தை மொத்த சேமிப்பிலிருந்து நிலையான ஓய்வூதிய வருமானத்திற்கு மாற்ற வேண்டும்.

ஓய்வூதிய சேமிப்பின் போதுமான அளவை அதிகரிக்க புதிய அணுகுமுறைகளை ஆராய  ஈபிஎப் எடுத்த நடவடிக்கை சரியான, விரைவான, பாராட்டத்தக்க நடவடிக்கையாகும்.

அனைத்து தரப்பினரும் தற்போது வலுவான ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு அமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

குறிப்பாக குறைந்த வாழ்நாள் வருமானம் உள்ளவர்களுக்கு இது முக்கியமாகும்.

அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையில், எந்தவொரு மலேசியரும் வறுமை குறித்த பயத்தில்  முதுமை அடையக்கூடாது என்று அவர் கூறினார்.

இன்று மலேசிய முதியவர்கள் முன்பை விட ஆரோக்கியமாகவும், சிறந்த கல்வியறிவுடனும், திறமையானவர்களாகவும் உள்ளனர்.

சரியான ஆதரவுடன் பலர் வேலை வாய்ப்பு, வழிகாட்டுதல் அல்லது சமூக சேவை மூலம் தொடர்ந்து பங்களிக்க முடியும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset