
செய்திகள் மலேசியா
வறுமை குறித்த பயத்தில் எந்தவொரு மலேசியரும் முதுமை அடையக்கூடாது: பிரதமர்
கோலாலம்பூர்:
வறுமை குறித்த பயத்தில் எந்தவொரு மலேசியரும் முதுமை அடையக்கூடாது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
மக்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதற்கு ஏற்ப, மலேசியா தனது கவனத்தை மொத்த சேமிப்பிலிருந்து நிலையான ஓய்வூதிய வருமானத்திற்கு மாற்ற வேண்டும்.
ஓய்வூதிய சேமிப்பின் போதுமான அளவை அதிகரிக்க புதிய அணுகுமுறைகளை ஆராய ஈபிஎப் எடுத்த நடவடிக்கை சரியான, விரைவான, பாராட்டத்தக்க நடவடிக்கையாகும்.
அனைத்து தரப்பினரும் தற்போது வலுவான ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு அமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
குறிப்பாக குறைந்த வாழ்நாள் வருமானம் உள்ளவர்களுக்கு இது முக்கியமாகும்.
அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையில், எந்தவொரு மலேசியரும் வறுமை குறித்த பயத்தில் முதுமை அடையக்கூடாது என்று அவர் கூறினார்.
இன்று மலேசிய முதியவர்கள் முன்பை விட ஆரோக்கியமாகவும், சிறந்த கல்வியறிவுடனும், திறமையானவர்களாகவும் உள்ளனர்.
சரியான ஆதரவுடன் பலர் வேலை வாய்ப்பு, வழிகாட்டுதல் அல்லது சமூக சேவை மூலம் தொடர்ந்து பங்களிக்க முடியும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 5:08 pm
உலகின் முதலிட ரப்பர் உற்பத்தியாளராக மாற மலேசியா இலக்கு கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ ஜொஹாரி
June 17, 2025, 5:07 pm
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை வரண்ட, வெப்பமான வானிலையை ஏற்படுத்தும்: மெட் மலேசியா
June 17, 2025, 5:06 pm
பெக்கான் அம்னோ இளைஞர் கூட்டத்தில் நஜிப் வழக்கின் முன்னேற்றங்கள் முக்கிய விவாதமாக இருக்கும்
June 17, 2025, 5:04 pm
ஆப்டோமெட்ரி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும்: ஜூல்கிப்ளி அஹ்மத்
June 17, 2025, 4:56 pm
முதியோர் பராமரிப்பை மேம்படுத்த மலேசியா சுகாதார முதலீட்டை அதிகரிக்கிறது: பிரதமர் அன்வார்
June 17, 2025, 3:49 pm
மஇகா முன்னாள் தலைவர் பழனிவேலுவின் மறைவுக்குப் பிரதமர், துணைப் பிரதமர் இரங்கல்
June 17, 2025, 3:24 pm