நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை வரண்ட, வெப்பமான வானிலையை ஏற்படுத்தும்: மெட் மலேசியா

கோலாலம்பூர்:

தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை வரண்ட, வெப்பமான வானிலையை ஏற்படுத்தும்.

மெட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் இதனை கூறினார்.

கடந்த  மே 10 முதல் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் வரண்ட, வெப்பமான வானிலையின் நிகழ்வை ஏற்படுத்தியுள்ளது.

இது செப்டம்பர் வரை மழை இல்லாத நாட்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது இடியுடன் கூடிய மழை,  பலத்த மழை பெய்யும்.

குறிப்பாக தீபகற்பத்தின் மேற்குப் பகுதிகள், வடக்கு சரவா, மேற்கு சபாவில் காலையிலும், தீபகற்பத்தின் உட்புறப் பகுதிகள், சரவா, சபாவில் பிற்பகல், இரவில் மழை பெய்யும்.

தீபகற்பத்தின் மேற்கு கடற்கரை, வடக்கு சரவா, மேற்கு சபாவில் பலத்த மழை,  பலத்த காற்று வீசும்.

குறிப்பாக வளிமண்டல நிலைமைகள் பொருத்தமான அதிகாலையில் நிகழலாம்.

கடந்த ஏழு நாட்களாக பெரும்பாலான நிலையங்கள் 35 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான வெப்பநிலையைப் பதிவு செய்தன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset