
செய்திகள் மலேசியா
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை வரண்ட, வெப்பமான வானிலையை ஏற்படுத்தும்: மெட் மலேசியா
கோலாலம்பூர்:
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை வரண்ட, வெப்பமான வானிலையை ஏற்படுத்தும்.
மெட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் இதனை கூறினார்.
கடந்த மே 10 முதல் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் வரண்ட, வெப்பமான வானிலையின் நிகழ்வை ஏற்படுத்தியுள்ளது.
இது செப்டம்பர் வரை மழை இல்லாத நாட்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வப்போது இடியுடன் கூடிய மழை, பலத்த மழை பெய்யும்.
குறிப்பாக தீபகற்பத்தின் மேற்குப் பகுதிகள், வடக்கு சரவா, மேற்கு சபாவில் காலையிலும், தீபகற்பத்தின் உட்புறப் பகுதிகள், சரவா, சபாவில் பிற்பகல், இரவில் மழை பெய்யும்.
தீபகற்பத்தின் மேற்கு கடற்கரை, வடக்கு சரவா, மேற்கு சபாவில் பலத்த மழை, பலத்த காற்று வீசும்.
குறிப்பாக வளிமண்டல நிலைமைகள் பொருத்தமான அதிகாலையில் நிகழலாம்.
கடந்த ஏழு நாட்களாக பெரும்பாலான நிலையங்கள் 35 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான வெப்பநிலையைப் பதிவு செய்தன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 5:08 pm
உலகின் முதலிட ரப்பர் உற்பத்தியாளராக மாற மலேசியா இலக்கு கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ ஜொஹாரி
June 17, 2025, 5:06 pm
பெக்கான் அம்னோ இளைஞர் கூட்டத்தில் நஜிப் வழக்கின் முன்னேற்றங்கள் முக்கிய விவாதமாக இருக்கும்
June 17, 2025, 5:05 pm
வறுமை குறித்த பயத்தில் எந்தவொரு மலேசியரும் முதுமை அடையக்கூடாது: பிரதமர்
June 17, 2025, 5:04 pm
ஆப்டோமெட்ரி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும்: ஜூல்கிப்ளி அஹ்மத்
June 17, 2025, 4:56 pm
முதியோர் பராமரிப்பை மேம்படுத்த மலேசியா சுகாதார முதலீட்டை அதிகரிக்கிறது: பிரதமர் அன்வார்
June 17, 2025, 3:49 pm
மஇகா முன்னாள் தலைவர் பழனிவேலுவின் மறைவுக்குப் பிரதமர், துணைப் பிரதமர் இரங்கல்
June 17, 2025, 3:24 pm