நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா முன்னாள் தலைவர் பழனிவேலுவின் மறைவுக்குப் பிரதமர், துணைப் பிரதமர் இரங்கல் 

கோலாலம்பூர்:

காலம் சென்ற முன்னாள் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலுவின் குடும்பத்தினருக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல் தெரிவித்தார்.

மஇகா தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல அரச பதவிகளில் செயற்பட்டதன் மூலம், பழனிவேல் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளதை யாராலும் மறக்க இயலாது என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

இந்திய சமூகத்தின் வளர்ச்சி, கிராமப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புபோன்ற பல துறைகளில் அவர் ஆற்றிய சேவை போற்றதற்குரியது என்று அவர் குறிப்பிட்டார்.  

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடியும் பழனிவேலின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

மலேசியா ஒரு அரசியல் தலைவரை மட்டுமின்றி, நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய சேவையாளரை இழந்துள்ளது என்று ஜாஹித் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset