நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜூலை 1 முதல் சுல்தானா அமீனா மருத்துவமனையில் QR குறியீடு வழியாக காத்திருப்பு எண்களைப் பெறலாம்: டத்தோ ஓன் ஹபீஸ் காசி 

ஜொகூர் பாரு:

ஜூலை 1 முதல் சுல்தானா அமீனா மருத்துவமனையில் QR குறியீடு வழியாக காத்திருப்பு எண்களைப் பெறலாம் என்று ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி தெரிவித்துள்ளார். 

Smart Queue System (SQS) மூலம் நோயாளிகள் மருத்துவரைக் காண்பதற்கும் மருந்தகத்தில் மருந்துகளை எடுக்க வழங்கப்படும் காத்திருப்பு எண்களை QR குறியீடு வழியாக பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் Smart Queue System (SQS) திட்டத்தை அறிமுகம் செய்யும் முதல் பொது மருத்துவமனையாகவும் ல்தானா அமீனா மருத்துவமனை திகழ்வதாக  ஓன் ஹபீஸ் காசி குறிப்பிட்டார். 

இதற்காக RM1 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, நோயாளிகள் மருத்துவரைப் பார்ப்பதற்கும் மருந்தகத்திற்கும் வரிசையில் நின்று இரு காத்திருப்பு எண்களை எடுக்க வேண்டும்.

தற்போது நோயாளிகள் QR குறியீடு வழியாக காத்திருப்பு எண்ணைப் பெறலாம். 

இந்த ஒரே காத்திருப்பு எண்ணைக் கொண்டு நோயாளிகள் மருத்துவரைப் பார்ப்பதோடு மருந்தகத்தில் மருந்து எடுக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset