நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகின் முதலிட ரப்பர் உற்பத்தியாளராக மாற மலேசியா இலக்கு கொண்டுள்ளது:  டத்தோஸ்ரீ ஜொஹாரி 

கோலாலம்பூர்:

உலகின் முதலிட ரப்பர் உற்பத்தியாளராக மாற மலேசியா மீண்டும் இலக்கு கொண்டுள்ளது.

தோட்ட மூலப் பொருட்கள் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி இதனை தெரிவித்தார்.

தற்போதுள்ள ரப்பர் தோட்டங்களை மேம்படுத்துவதில்  அரசாங்கம் முழு கவனம் செலுத்தி வருகிறது.

இதன் மூலம், புதிய உத்தி மூலம் உலகின் முதலிட ரப்பர் உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர் என்ற நிலைக்கு மலேசியாவை மீண்டும் கொண்டு வர முடியும்.

இதில் பெரும்பாலும் சிறு உரிமையாளர்களுக்குச் சொந்தமான கைவிடப்பட்ட பகுதிகளும் அடங்கும்.

ரப்பர் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக மலேசியா இன்னும் அதிக அளவு மூல இயற்கை ரப்பரை இறக்குமதி செய்ய வேண்டிய தற்போதைய முரண்பாட்டைச் சமாளிக்க இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது.

நாடு 33.7 பில்லியன் ரிங்கிட் ரப்பர் தயாரிப்பு ஏற்றுமதி மதிப்பைப் பதிவு செய்திருந்துள்ளது.

இதில்  கடந்த ஆண்டு 7.6 பில்லியன் ரிங்கிட்ட்  மதிப்புள்ள மூல இயற்கை ரப்பரை இறக்குமதி செய்ததாக அவர் கூறினார்.

024 ஆம் ஆண்டில், உள்நாட்டு கீழ்நிலை தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 7.6 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு மில்லியன் டன் இயற்கை ரப்பரை மலேசியா இறக்குமதி செய்யும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset