நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

726 ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, மொத்தம் 18 மில்லியன் ரிங்கிட் கல்வி உபகாரச்சம்பளம்

சுங்கைப்பட்டாணி

மாஜூ கல்வி மேம்பாட்டு கழகம் – எம்.ஐ.ஈ.டி, இவ்வாண்டு மொத்தம் 726 ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, 18 மில்லியன் ரிங்கிட்டிலான கல்வி உபகாரச்சம்பளத்தை வழங்கியுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டு முதல் எம்.ஐ.ஈ.டி வாயிலாக, சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மொத்தம் 216 மில்லியன் ரிங்கிட் கல்வி உபகாரச்சம்பளத்தைப் பெற்றுள்ளனர்.

ம.இ.கா. முன்னாள் தேசியத் தலைவர் மறைந்த துன் எஸ். சாமிவேலு அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அந்த உதவித்திட்டம், நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அசைக்க முடியாத தூணாக உள்ளதாக, இந்நாள் ம.இ.கா. தேசியத் தலைவரும் எம்.ஐ.ஈ.டி. தலைவருமான தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கல்வி உதவிநிதி சார்ந்த அந்த எண்ணிக்கைகள் வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல. அவை எதிர்காலத்தை வடிவமைக்கும். குடும்பங்களை உயர்த்தும். இந்தியச் சமூகம் தொடர்ந்து முன்னேற்றம் காண்பதையும் அது புலப்படுத்துவதாக அவர் கூறினார்.

துன் சாமிவேலுவின் சிந்தனையில் உதிர்த்த எம்.ஐ.ஈ.டி, டேஃப், ஏய்ம்ஸ்ட் முதலானவை தலைமுறை தலைமுறையாக நிலையான கல்விச் சூழலை உருவாக்கி வருகின்றது.

மேலும், கடந்த ஈராண்டுகளாக, அந்த உதவிநிதியை வழங்க பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உதவியுள்ளார். குறிப்பாக, குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவரது அர்ப்பணிப்பு மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது.

கல்வியறிவைப் பெறுவதில், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பொருளாதார சுமைகள் தடையாக இல்லாததை அது உறுதிபடுத்தியிருப்பதாக கூறிய தான் ஸ்ரீ விக்னேஸ்வரன், பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

நேற்று ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்வி உபகாரச்சம்பளத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சியில், அவர் அவ்வாறு பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset