நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் பணி ஓய்வுக்கான வயது வரம்பை 75-ஆக உயர்த்த வேண்டும்: Fredrik Reinfeldt 

கோலாலம்பூர்:

மலேசியாவில் பணி ஓய்வுக்கான வயது வரம்பை 75-ஆக உயர்த்த வேண்டும் என்று சுவீடன் முன்னாள் பிரதமர் Fredrik Reinfeldt தெரிவித்துள்ளார். 

ஓய்வு பெறும் வயது வரம்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் நீடித்த ஆயுளும் , ஓய்வூதியத் திட்டத்தின் நிலைத்தன்மையையும் கருத்தில் கொண்டு ஓய்வு பெறும் வயது வரம்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஓய்வூதியத் நிறுவனம் (EPF) நடத்திய சர்வதேச சமூக நல மாநாட்டில் உரையாற்றிய பொருளியலாளருமானFredrik Reinfeldt தற்போது நிலவுகிற ஓய்வு நடைமுறைகள் பெரும்பாலும் காலப் போக்கில் பொருந்தாது என்றார்.

அதுமட்டுமல்லாமல்,  சிலர் 65 வயதில் ஓய்வுபெற்று பல தசாப்தங்கள் ஓய்வான வாழ்கையை அனுபவிக்கலாம் என நினைக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் பலரும் 100 வயது வரை வாழக்கூடியவர்கள் என அவர் கூறினார்.

65 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்குக் கடினமான வேலைகளை வழங்குபவர்களுக்குப் பதிலாக அவர்களின் திறன்களுக்கு ஏற்ப பொருத்தமான பணிகளில் ஈடுபடுத்த strong கொள்கைத் திட்டங்களின் ஆதரவுடன் மாற்றப்பட வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.

65 வயதுக்கு மேற்பட்டோர் பணியில் தொடர விரும்பினால் அவர்களுக்கு வரித்தள்ளுபடிகள் வழங்கும் ஸ்வீடனின் உத்தியோகப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்கள் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு தங்களை அமைத்துக் கொள்ள உதவுகின்றன என்பதை ரெயின்ஃபெல்ட் குறிப்பிட்டார்.

1970களிலிருந்தே ஸ்வீடனில் தொழிலாளர் சங்கங்களும், வேலை வழங்குநர்களும் கூட்டுத் தோழமை ஒப்பந்தங்கள் மூலம் வாழ்நாள் கல்வியில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மாற்றம் எல்லா மேம்பட்ட நாடுகளுக்கும் குறிப்பாக மலேசியாவிலும் அமல்படுத்துவதற்கான நேரம் இப்போது தான் என அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset