நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாருக்கு எதிரான யூசோஃப் ராவுத்தரின் வழக்கு மேலாண்மை செப்டம்பர் 30இல் நடைபெறும்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிரான யூசோஃப் ராவுத்தரின் வழக்கு மேலாண்மை வரும் செப்டம்பர் 30இல் நடைபெறும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக முஹம்மது யூசோஃப் ராவுத்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கின் மேலாண்மைக்கான தேதியை செப்டம்பர் 30 என உயர் நீதிமன்றம் இன்று நிர்ணயித்துள்ளது.

டத்தோஸ்ரீ அன்வார் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்துடன் இந்த வழக்கு தொடர்புடையது.

இந்த தேதியை நீதிபதி ரோஸ் மாவர் ரோசெய்ன் நிர்ணயித்தார்.

மேலும் அன்வார், முஹம்மது யூசோஃப் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள், எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கான மேல்முறையீட்டின் நிலை குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க அனுமதிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதமருக்கு சம்மனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பதும் அடங்கும்.

இன்றைய நடவடிக்கைகளில் டத்தோஸ்ரீ அன்வாரை பிரதிநிதித்துவப்படுத்த வழக்கறிஞர் ஆலன் வோங் மட்டுமே இருந்தார்.

அதே நேரத்தில் முஹம்மது யூசோஃப் சார்பாகப் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் முஹம்மது ரஃபீக் ரஷீத் அலி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset