நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹஜ் யாத்திரை மோசடி: விசாரணைக்கு உதவ 67 வயது ஆடவருக்கு தடுப்புக் காவல்

சிரம்பான்:

ஹஜ் யாத்திரை மோசடி தொடர்பான விசாரணைக்கு உதவ 67 வயது ஆடவருக்கு தடுப்புக் காவல் வைக்கப்பட்டுள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஜாஃபிர் முஹம்மத் யூசோப் இதனை தெரிவித்தார்.

மூன்று பேர் சம்பந்தப்பட்ட ஹஜ் யாத்திரை மோசடி வழக்கு விசாரணையில் உதவுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மந்தின் போலிஸ் நிலையத்தில் புகாரை தாக்கல் செய்ததை அடுத்து, நேற்று சிப்பாங் கேஎல்ஐஏ வட்டாரத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர்களில்  கணவன், மனைவி, அவர்களின் மகளும் அடங்குவர். இந்த மோசடியில் இன்னும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். 

மோசடி செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset