நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெடுஞ்சாலை நிதி மோசடி: டான்ஸ்ரீயின் வாக்குமூலம் வியாழக்கிழமை பதிவு செய்யப்படும்: அசாம் பாக்கி

புத்ராஜெயா:

நெடுஞ்சாலை நிதி மோசடி தொடர்பான டான்ஸ்ரீயின் வாக்குமூலம் வரும் வியாழக்கிழமை பதிவு செய்யப்படும்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனை உறுதிப்படுத்தினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை அமைப்பதற்காக சுகுக் நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணை தொடர்பாக டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட ஒருவரின் வாக்குமூலத்தை எம்ஏசிசி பதிவு செய்து வருகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இந்த நடைமுறை வரும் வியாழக்கிழமை தொடரும்.

தலைநகரில் உள்ள அந்த டான்ஸ்ரீயின் இல்லத்தில் காலை 9 மணிக்கு இந்த செயல்முறை நடைபெறும்.

முன்னதாக கடந்த ஜூன் 11ஆம் தேதி எம்ஏசிசி காலை 9 மணிக்குத் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் அவரிடம் ஆரம்ப வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.

ஆனால் உடல்நலக் காரணங்களால் அது தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டியிருந்தது.

இது வரும் வியாழக்கிழமை தொடரும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset