நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்க உயர்க்கல்வி கூடங்களில் 150,557 மாணவர்கள் மேற்கல்வியைப் பயில வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது 

கோலாலம்பூர்:

2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம் மாணவர்கள் சுமார் 150,557 பேர் அரசாங்க உயர்க்கல்வி கூடங்களில் மேற்கல்வியைத் தொடங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மலேசிய உயர்க்கல்வி அமைச்சு இந்த தகவலை வெளியிட்டது. 

UPU ONLINE மூலமாக மொத்தமாக 223,624 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் அதில் 67.33 விழுக்காட்டினர் அரசாங்க உயர்க்கல்வி கூடங்களுக்குக் கல்வி பயில செல்கின்றனர். 

மொத்த எண்ணிக்கையில் 86,589 மாணவர்களுக்குப் பொது பல்கலைக்கழகங்களும் 42,058 மாணவர்களுக்குப் போலிடெக்னிக்கும் 20,427 மாணவர்களுக்குச் சமூக கல்லூரிகளும் 1,483 மாணவர்களுக்கு மாரா உயர்க்கல்வி பிரிவின் கீழ் மேற்கல்வி பயில வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சமூக நல துறையின் கீழ் 43 பேர் அரசாங்க உயர்க்கல்வி கூடங்களுக்கு விண்ணபித்த மாணவர்களுக்கு முறையாக IPTA கிடைத்துள்ளது என்று அமைச்சு சொன்னது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset