
செய்திகள் மலேசியா
ஈரான் - இஸ்ரேல் மோதலால் வர்த்தக வழிகள் தடுக்கப்படலாம் என்ற கவலைகள் உள்ளன: பிரதமர்
கோலாலம்பூர்:
ஈரான் - இஸ்ரேல் மோதலால் வர்த்தக வழிகள் தடுக்கப்படலாம் என்ற கவலைகள் உள்ளன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய மோதல் மிகவும் கவலையளிக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மலேசிய வர்த்தகத்தை பாதிக்கும்.
குறிப்பாக வர்த்தக வழிகள் தடைபடும் சாத்தியக்கூறுகள் குறித்து கவலைகள் இருப்பதாக அவர் கூறினார்.
பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர்,
இது மத்திய கிழக்கு மாவட்டத்தில் இருந்து எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி, எண்ணெய் வர்த்தக பாதைகளுக்கு ஒரு முக்கிய பாதையாகும்.
ஆகையால் நிச்சயமாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் கவலைக்குரியதாகத் தெரிகிறது என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 10:19 pm
கூடுதல் உத்தரவு தொடர்பில் முன்னாள் ஏஜிக்கு எதிராக நஜிப் போலிஸ் புகார் செய்தார்
June 16, 2025, 10:10 pm
அன்வாருக்கு எதிரான யூசோஃப் ராவுத்தரின் வழக்கு மேலாண்மை செப்டம்பர் 30இல் நடைபெறும்
June 16, 2025, 10:06 pm
நெடுஞ்சாலை நிதி மோசடி: டான்ஸ்ரீயின் வாக்குமூலம் வியாழக்கிழமை பதிவு செய்யப்படும்: அசாம் பாக்கி
June 16, 2025, 4:50 pm
RON95 எரிபொருள் மானியத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்: பிரதமர் அன்வார்
June 16, 2025, 4:35 pm
எனது தந்தையின் உடல்நலனுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்: டான்ஸ்ரீ ஹாடி அவாங் மகன் வேண்டுகோள்
June 16, 2025, 4:32 pm