நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கணிதப் பாடத்தின் தேர்ச்சி விகிதம் குறைவு; திட்டமிட்ட முறையில் அணுக வேண்டும்: கல்வி சங்கம் வலியுறுத்து

கோலாலம்பூர்: 

எஸ்பிஎம் தேர்வில் கணிதப் பாடத்தின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கு திட்டமிட்ட செயல்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று மலேசிய கல்வி சங்கம் தெரிவித்துள்ளது. 

கணிதப் பாடத்திட்டத்தை உருவாக்குபவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் இணைந்து செயல்பட்டால் கணிதப் பாடத்தின் தேர்ச்சி விகித்ததில் மாற்றத்தைக் காணலாம் என்று அச்சகத்தின் செயலாளர் Hamidi Mookkaiyah குறிப்பிட்டார். 

கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வில் 84,025 மாணவர்கள் கணிதத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

மூலக் காரணங்களை திட்டமிட்ட வகையில் கண்டறிந்து, இலக்குநோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் கல்வி வளர்ச்சியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.

தற்போதைய கற்பித்தல் முறைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். 

மேலும், மாணவர்கள் கணிதப் பாடத்தை கடினமாக பாடமாக கருதாத நிலையில் அவர்களுக்கு எளிமையான முறையில் போதிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜமிடி தனது அறிக்கையில் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset