நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜிஎஸ்டியும் எஸ்எஸ்டியும் ஒன்றல்ல; இது பி40, எம்40 குடும்பங்களை நசுக்கும்: சைஃபுடின் 

கோலாலம்பூர்:

ஜிஎஸ்டியும் எஸ்எஸ்டியும் ஒன்றல்ல என்று இண்ட்ரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் அப்துல்லா கூறினார்.

வரி விதிப்பு முறை குறித்த அரசாங்கத்தின் புரிதல் இல்லாதது வருத்தமளிக்கிறது.

ஜிஎஸ்டி, எஸ்எஸ்டி  ஆகியவற்றின் அர்த்தத்தை அரசாங்கம் மக்களுக்கு தவறாக சித்தரித்துள்ளது.

உண்மையில், ஜிஎஸ்டி என்பது சரக்கு மற்றும் சேவை வரி என்பதைக் குறிக்கிறது.

இதில் பொருட்கள், சேவைகள் அடங்கும். குறிப்பிட்டது போல் பொது சேவைகள் மட்டும் இல்லை.

எஸ்எஸ்டி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுமல்ல. சில உள்ளூர் பொருட்கள், சேவைகளுக்கும் பொருந்தும் என்று அவர் கூறினார்.

முன்னதாக நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு எஸ்எஸ்டி நீட்டிப்பை ஆதரித்தார்.

இது அதிக வருமானம் கொண்ட குழுவை குறிவைக்கிறது என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில் இனிமேல் மக்கள் மும்மடங்கு பொருளாதார சுமையால் பாதிக்கப்பட உள்ளனர்  என்பது அரசாங்கத்திற்குத் தெரியுமா என்று சைஃபுடின் கேள்வி எழுப்பினார்.

இந்த எஸ்எஸ்டியின் விரிவாக்கம் ரோன்95 மானியங்கள, அதிக மின்சாரக் கட்டணங்களை இலக்காகக் கொண்டது. இது பி40, எம்40 குடும்பங்களை நசுக்கும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset