நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொருள் நகர்த்தல் மேலாண்மை அறிமுக விழா: மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிமுகம் செய்து வைத்தார்

கிள்ளான்: 

மனிதவள அமைச்சின் கீழ் உள்ள HRDCorp மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2025 தேசிய பயிற்சி வாரத்தின் முதன்மையான திட்டங்களில் ஒன்றான பொருள் நகர்த்தல் மேலாண்மையும் எல்லைகளுக்கு அப்பால் பணியாளர்களை மேம்படுத்துதல் திட்டமும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் கண்டது. 

கிள்ளானில் உள்ள  தங்கும் விடுதியின் மாநாட்டு மையத்தில் நடந்த இந்த அறிமுக விழாவில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கலந்து கொண்டு அறிமுகம் செய்தார். 

மனிதவள அமைச்சின் கீழ் உள்ள மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து INFINITY LOGISTICS AND TRANSPORTS SDN BHD நிறுவனம், மலேசிய மனிதவள அமைச்சு மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

மலேசியாவில் உள்ள ஆள்பல தொழிற்துறையின் உருமாற்றத்தை ஆசியான் வட்டார ரீதியில் கொண்டு சேர்க்கவும் இந்த திட்டம் NTW 2025 முன்னெடுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. 

ஆசியானின் எல்லைகளற்ற திறன், நிபுணத்துவம் வாய்ந்த வேலை சந்தையை உருவாக்க மனிதவள அமைச்சு, மனிதவள மேம்பாட்டு அமைச்சு தொடர்ந்து அதன் முயற்சிகளை முன்னெடுக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். 

பொருள் நகர்த்தல் மேலாண்மை திட்டமானது எல்லைகள் கடந்த பணியாளர்களை மேம்படுத்துவது தான் முதன்மையான நோக்கமாகும். 

வளர்ந்து வரும் மேலாண்மை தொழிற்துறையின் மேம்பாட்டினை மேலோங்க செய்ய கல்வியறிவு, திறன்சார் நிபுணத்துவம் ஆகியவை தேவைப்படுகிறது. 

மனிதவள அமைச்சு இந்த முன்னெடுப்பினை கொண்டு வந்திருக்கும் நிலையில் அமைச்சின்  3 கே குறிப்பாக, KEMAHIRAN, KEBERHASILAN, KEBAJIKAN ஆகிய விவகாரங்களில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

மலேசிய போக்குவரத்து அமைச்சுடன் வியூக ஒத்துழைப்பினை கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்திற்கான மனிதவள அமைச்சு தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்கிறது என்று அமைச்சர்  ஸ்டீவன் சிம் கூறினார். 

- மவித்ரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset