நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற டான்ஸ்ரீ மொஹைதினுக்கு நீதிமன்றம் அனுமதி

கோலாலம்பூர்:

வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

தம் மீதான ஏழு அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி வழக்குகளை செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி டான்ஸ்ரீ மொஹைதின் மனு செய்திருந்தார்.

அவரின் மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 417 (1)(பி) இன் கீழ் மொஹைதின் தனது வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றவும் விசாரிக்கவும் அனுமதிக்கும் வரம்பை எட்டியதைக் கண்டறியப்பட்டது.

இதன் வாயிலாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முஹம்மது ஜமீல் ஹுசைன் இந்த முடிவை எடுத்தார்.

மொஹைதின் சார்பாக மனுதாரராகப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் டத்தோ ஹிஸ்யாம் தே போ டீக், வழக்குத் தொடுப்பவர் சார்பாக துணை அரசு வழக்கறிஞர் டத்தோ வான் ஷஹாருதீன் வான் லாடின் ஆகியோரின் வாதங்களைக் கேட்ட பிறகு முஹம்மது ஜமீல் இந்த முடிவை எடுத்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset