நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிசிக்கு வாழ்த்துகள்; தகுதியானவர் பொருளாதார அமைச்சு பொறுப்பேற்பார்: பிரதமர்

கோலாலம்பூர்:

ரபிசிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தகுதியானவர் பொருளாதார அமைச்சு பொறுப்பேற்பார் என கூறினார்.

எரிசக்தி ஆசியா 2025 மாநாட்டில் பேசிய டத்தோஸ்ரீ அன்வார்,

பொருளாதார அமைச்சராக சிறப்பாக பணியாற்றியதற்காக டத்தோஸ்ரீ ரபிசி ரம்லிக்கு எனது நன்றிகள்.

மேலும் மடான் அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சு தொடர்ந்து நீடிக்கும்.

தகுதியான புதிய அமைச்சர் அல்லது எந்த அமைச்சு பொருளாதார அமைச்சின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை நான் சரியான நேரத்தில் முடிவு செய்வேன்.

குறிப்பாக பொருளாதார அமைச்சகத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியமில்லை.

ரபிசி அமைச்சரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்த பிறகு அந்த அமைச்சு மூடப்படும் என்ற வதந்திகள் தவறானது என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset