நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி

புது டெல்லி: 

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில்  ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

கேதார்நாத்திலிருந்து  குப்தகாஷிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர், அதிகாலை 6.00 மணியளவில் ருத்ரபிரயாகையை கடக்க முயன்றபோது பெரும் விபத்துக்குள்ளானது.

வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய அந்த ஹெலிகாப்டரில் இருந்த விமானி, பயணிகள் என 7 பேர் பலியாகினர்.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset