செய்திகள் இந்தியா
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
புது டெல்லி:
நாய் பாபு என்ற பெயரில் நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ், நாயின் பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு பிகாரில் வழங்கப்பட்டுள்ளது.
பிகாரில் மக்களின் குடியுரிமை கேட்டு ஆதார், குடும்ப அட்டையை அடையாள சான்றிதழாக ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவரும்நிலையில், நாய்க்கு குடியரிமை வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாட்னா அருகே உள்ள மசவுரியில், ஒரு நாய்க்கு வழங்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் வைரலாகி வருகிறது.
அந்த சான்றிதழில், தந்தை பெயர் குட்டா பாபு, தாய் குட்டியா தேவி, புகைப்படம் என்ற இடத்தில் நாயின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. வீட்டு முகவரியும் இடம்பெற்றுள்ளது.
இந்த சான்றிதழில், வருவாய்த் துறை அதிகாரியின் டிஜிட்டல் கையெழுத்தும் உள்ளது. இந்த இருப்பிடச் சான்றிதழ் உண்மையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாய் பெற்றிருக்கும் இருப்பிடச் சான்றிதழை, குடியுரிமைக்கான சான்றாக ஏற்று வாக்காளர் அட்டை வழங்கப்படும்.
ஆனால், குடும்ப அட்டையும் ஆதார் அட்டையும் போலி என்று அரசு நிராகரிக்குமா என்று இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
காங்கிரஸ் கண்டனம்
இது குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில், அந்த நாய் வாக்காளராக வந்து பாஜகவுக்கு வாக்களிக்கும். அவர்கள் நாய் பாபுவை ஒருவேளை வேட்பாளராகக்கூட ஆக்குவார்கள். இது பாஜக, தேர்தல் முறையை மோசமாகக் கையாள்வதற்கு அப்பட்டமான உதாரணம் என்று தெரிவித்துள்ளது.
நாய் பாபுவுக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, அந்த சான்றிதழை பிகார் அரசு ரத்து செய்வதாக அறிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
