செய்திகள் இந்தியா
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
புது தில்லி:
பஹல்காமில் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என்றும் இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் மக்களவையில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா வலியுறுத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர்,
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பிரதமரின், மத்திய உள்துறை அமைச்சரின், பாதுகாப்புத் துறை அமைச்சரின், தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கடமையாகும்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது எந்தவித பாதுகாப்பும் போடப்படாதது ஏன்?
இது ஒன்றிய அரசின், உளவுத் துறையின் மிகப்பெரிய தோல்வி.
ஒன்றிய உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவி வகித்து வரும் நிலையில், மணிப்பூர் பற்றி எரிந்தது. தில்லி கலவரங்கள் நிகழ்ந்தன. தற்போது பஹல்காம் தாக்குதல். கடந்த 2020ம் ஆண்டுக்குப் பிறகு 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் அவர் பதவிவிலக வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருமாறும்: செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரை
August 14, 2026, 1:10 pm
ஆகஸ்ட் 15 ‘இந்திய தினம்’: அமெரிக்க மாகாணங்கள் பிரகடனம்
August 13, 2026, 5:18 pm
அருணாசல பிரதேச மாநில எல்லையையொட்டி படைகளைக் குவித்து வரும் சீனா
August 12, 2026, 6:04 pm
அமித் ஷாவின் பிம்பம் எனும் "பலூன்" காற்றிறங்கி விட்டது: ராகுல் கிண்டல்
August 12, 2026, 5:58 pm
இன்ஸ்டாகிராம் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் திருமணமான 1 மணி நேரத்தில் மரணம்
August 7, 2026, 11:50 am
விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயற்சி செய்த கேராளவைச் சேர்ந்த நபர் கைது
August 7, 2026, 9:51 am
