செய்திகள் இந்தியா
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
புது தில்லி:
பஹல்காமில் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என்றும் இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் மக்களவையில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா வலியுறுத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர்,
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பிரதமரின், மத்திய உள்துறை அமைச்சரின், பாதுகாப்புத் துறை அமைச்சரின், தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கடமையாகும்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது எந்தவித பாதுகாப்பும் போடப்படாதது ஏன்?
இது ஒன்றிய அரசின், உளவுத் துறையின் மிகப்பெரிய தோல்வி.
ஒன்றிய உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவி வகித்து வரும் நிலையில், மணிப்பூர் பற்றி எரிந்தது. தில்லி கலவரங்கள் நிகழ்ந்தன. தற்போது பஹல்காம் தாக்குதல். கடந்த 2020ம் ஆண்டுக்குப் பிறகு 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் அவர் பதவிவிலக வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
குடும்பத் தகராறில் மடிந்த இரு உயிர்கள்: பெற்றோர் சடலங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த 6 வயது சிறுவன்
April 19, 2026, 11:17 am
மீண்டும் முடங்கியது ஹோர்முஸ் நீரிணை: இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு
April 18, 2026, 5:15 pm
மாணவியின் பலிக்கு 'பகடிவதை' காரணமா?: கதறும் தாயின் வாக்குமூலம்
April 18, 2026, 5:10 pm
கடனை திருப்பிக் கேட்ட கடைக்காரருக்கு நேர்ந்த கதி: ஆத்திரத்தில் காதை கடித்துக் குதறிய பெண்
April 18, 2026, 5:06 pm
காதலனைச் சுத்தியலால் அடித்துக் கொன்ற காதலி
April 18, 2026, 7:21 am
இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி
April 17, 2026, 5:54 pm
