செய்திகள் இந்தியா
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
புது தில்லி:
பஹல்காமில் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என்றும் இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் மக்களவையில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா வலியுறுத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர்,
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பிரதமரின், மத்திய உள்துறை அமைச்சரின், பாதுகாப்புத் துறை அமைச்சரின், தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கடமையாகும்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது எந்தவித பாதுகாப்பும் போடப்படாதது ஏன்?
இது ஒன்றிய அரசின், உளவுத் துறையின் மிகப்பெரிய தோல்வி.
ஒன்றிய உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவி வகித்து வரும் நிலையில், மணிப்பூர் பற்றி எரிந்தது. தில்லி கலவரங்கள் நிகழ்ந்தன. தற்போது பஹல்காம் தாக்குதல். கடந்த 2020ம் ஆண்டுக்குப் பிறகு 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் அவர் பதவிவிலக வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
