
செய்திகள் இந்தியா
இந்தியா-பாக். இடையிலான போரை நிறுத்தியதாக ட்ரம்ப் பொய் சொல்கிறார் என்று சொல்ல பிரதமர் மோடிக்கு தைரியம் உண்டா?: ராகுல் காந்தி கேள்வி
புதுடெல்லி:
பாகிஸ்தானுக்கு எதிரான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், அவர் பொய் பேசுகிறார் என்று சொல்ல பிரதமர் மோடிக்கு தைரியம் உண்டா என ராகுல் கேள்வி எழுப்பினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எதிர்க்கட்சிகள் பாறை போல உறுதியாக நின்று மத்திய அரசுக்கு ஆதரவை வழங்கின.
குறிப்பாக, இந்த நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே அரசை ஆதரிப்பதாக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்று உறுதியளித்ததை நினைவுகூர விரும்புகிறேன். அதேநேரம், பஹல்காமில் பாகிஸ்தானால் திட்டமிடப்பட்ட மிருகத்தனமான தாக்குதலுக்கு கண்டனத்தையும் தெரிவித்தோம்.
ஆனால், ராணுவ நடவடிக்கைக்கு முன்பே பாகிஸ்தான் அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது இந்த விவகாரத்தில் பல கேள்விகளை எழுப்புகிறது. போர் தொடங்கும்வரை பாகிஸ்தான் மட்டும்தான் எதிரி என இந்தியா நினைத்தது. ஆனால, போர் தொடங்கிய பிறகுதான் இந்தியாவின் உண்மையான எதிரி சீனா என்று தெரிந்தது. போர் தொடர்பான பல முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா அளித்து உதவியது.
இந்தியாவில் தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருடன் உணவருந்தியது பற்றி ட்ரம்பிடம் பிரதமர் மோடி ஏன் கேள்வி எழுப்பவில்லை.
உலக நாடுகள் ஏன் அதை கண்டிக்கவில்லை. இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒரே நிலையில்வைத்துதான் உலக நாடுகள் பார்க்கின்றன.
இந்தியா-பாகிஸ்தான் போரை தான் மத்தியஸ்தம் செய்து தடுத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 29 முறை கூறியுள்ளார்.
அவர் ஒரு பொய்யர் என்று கூற இந்திரா காந்தியைப் போல பிரதமர் மோடிக்கு தைரியம் உண்டா? அப்படி தைரியம் இருந்தால் பிரதமர் இங்கிருந்து (நாடாளுமன்றத்தில்) சொல்லட்டும். ராணுவ நடவடிக்கைகள் உட்பட சீனா வழங்கிய தகவல்களின் அடிப்படையில்தான் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்தியா என்ன செய்யப்போகிறது?.
சீனாவும் பாகிஸ்தானும் இணைந்திருப்பது இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானன், அதற்கு உதவும் சீனாவின் வெளியுறவு கொள்கையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தோல்வி அடைந்துவிட்டது. இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm