
செய்திகள் இந்தியா
காஸா போர் நிறுத்தத் தீர்மானத்தை புறக்கணித்து இந்திய வெளியறவு கொள்கையை மோடி அரசு சீர்குலைத்துவிட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புது டெல்லி:
காஸா போர் நிறுத்த ஐ.நா. தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் இந்தியாவின் வெளியறவு கொள்கை சீர்குலைந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் பக்கத்தில் செய்துள்ள பதிவில், காஸா போர் நிறுத்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததன் மூலம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது.
மத்திய கிழக்கு போர் பதற்றம் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் தனது நீடித்த நிலைப்பாட்டை இந்தியா கைவிட்டுவிட்டதா?
காஸா போர் நிறுத்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்ததன் மூலம் தெற்காசியா, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எனப் பல்வேறு நிலைகளில் இந்தியா தனியாக நிற்கிறது.
பாலஸ்தீனம் தொடர்பான வாஜ்பாயின் நிலைப்பாட்டையும் பாஜக கைகழுவி விட்டுவிட்டது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am