நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது

கொச்சி: 

கேரள கடற்பகுதியில் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயை 6 நாள்களாக போராடி பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக இந்திய கடலோரக் காவல் படை தெரிவித்தது.

கேரள கடல் பகுதியில் திங்கள்கிழமை காலை சிங்கப்பூர் கொடியுடன் கூடிய எம்.வி. வான் ஹை 503 சரக்கு கப்பல் தீப்பிடித்து ஏரிந்தது.

22 மாலுமிகளில் 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 4 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கப்பலில் 100க்கும் மேற்பட்ட கண்டெய்னர்களில் தீப்பற்றி எரிந்து வருகிறது.

இதை கடந்த 6 நாள்களாக போராடி இந்திய கடலோர காவல்படை அணைந்துள்ளது. மேலும் கப்பல் சரிந்து நீரில் மூழ்காமல் இருக்கவும், கரையை தட்டாமல் இருக்கவும்  பணிகளை இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் சிறப்பாக மேற்கொண்டன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset