
செய்திகள் இந்தியா
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
புது டெல்லி:
அகமதாபாத் விமான விபத்துக்கு ரூ.2,400 கோடிக்கும் அதிகமான காப்பீடு தொகை பதிவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமான விழுந்து நொறுங்கியதில் 241 பயணிகளும், 5 மருத்துவ மாணவர்களும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இதுவரையில் இல்லாத அளவுக்கு இந்த சம்பவத்துக்கு ரூ.2400 கோடி வரையில் இன்சூரன்ஸ் கிளைம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் நியூ இண்டியா அஷ்யூரன்ஸ் மற்றும் டாடா ஏஐஜி நிறுவனங்களில் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
விமானத்தின் வயது, தரத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை வழங்கப்படும். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.2,400 கோடி வரை காப்பீடு தொகை கிடைக்கும்.
இதில் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.1.26 கோடி இழ்பபீடு வழங்க வேண்டும்.
ஆன்லைனில் விமான டிக்கெட்களில் காப்பீடு சேவை பெற்ற பயணிகளுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை கூடுதல் காப்பீடு தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: 16 ஏா் இந்தியா விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
June 14, 2025, 10:22 am
போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய உத்தரவு
June 13, 2025, 10:05 pm
காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் கேட்ட 21 பண்டிதர்கள் கைது
June 13, 2025, 9:50 pm