நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?

குஜராத்:

அஹமதாபாத் விமான விபத்து நிகழ்வதற்கு முன் விமானி சுமித் சபர்வால் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த கடைசி தகவல் தற்போது வெளி வந்துள்ளன. 

ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் குஜராத்திலிருந்து லண்டன் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். 

மே டே அழைப்பு விடுத்து பின் விமானத்தின் இயந்திரத்தில் மேலேலும்ப தேவையான உந்து சக்தி இல்லை.

அதனால் விமானத்தை மேல் எழுப்ப முடியவில்லை. விமானம் கீழ் நோக்கி செல்கிறது என்று விமானி சுமித் சபர்வால் என்று கூறியுள்ளார்.

விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அவரை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அழைப்புகளுக்குப் பதிலளிக்கப்படவில்லை என இந்திய விமானக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்த நிலையில் அபாய தகவலை அறிந்து காப்பாற்றுவதற்கு முன்னதாகவே விமானம் விழுந்து நொறுங்கியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset