நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

என் தந்தையை மீட்டுக் கொடுத்தால் நான் தருகிறேன் 2 கோடி ரூபாய்: ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்தவரின் மகள்

குஜராத்: 

தன் தந்தையை உயிருடன் மீட்டுக் கொடுத்தால் தான் 2 கோடி ரூபாய் தர தயார் என்று அஹமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவரின் மகள், Falguni பேசும் காணொலி பார்ப்பவர்களின் இதயங்களை ரணமக்கியுள்ளன. 

உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்புனர்களுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு தருவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் அதற்கு  Falguni பதிலளித்துள்ளார்.

1 கோடி ரூபாய்க்குப் பதில் தாம் இரண்டு கோடி கொடுக்க தயார். அவர்களால் என் தந்தையை உயிருடன் மீட்டுத் தர முடியுமா என்று அழுதுக் கொண்டே கேட்டும் காணொலி சமூக ஊடகத்தில் பொது மக்களை வேதனையடைய செய்துள்ளது.. 

தன் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும்  அவருக்கு தன் தந்தையின் துணை தேவை என்றும் Falguni குறிப்பிட்டார்.

தனக்கு அவரது அன்பும் பாசமும் தேவை என்றும் அதை உங்களின் 1 கோடி ரூபாய் நிதியால் கொடுக்க முடியுமா என்று அவர் கேட்பது கண்களைக் குளமாக்கின.  

தந்தையின் உடலை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனைக்காக இரத்த மாதிரியை வழங்க வந்த போது  Falguni கூறிய வார்த்தைகள் அவரின் வலியை வெளிப்படுத்தியுள்ளது.

-  அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset