
செய்திகள் இந்தியா
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: 16 ஏா் இந்தியா விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
புதுடெல்லி:
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக 16 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக ஏா் இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இஸ்ரேல் பாலஸ்தீனத்தை தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் தொடங்கியுள்ளதன் காரணமாக வான் எல்லை மூடப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கையை ஏா் இந்தியா மேற்கொண்டது.
ஈரான் தலைநகா் தெஹ்ரானில் உள்ள இராணுவத் தளங்கள், குடியிருப்புகளை குறிவைத்து வெள்ளிக்கிழமை இஸ்ரேல் கோரமான தாக்குதல் நடத்தியது. இதனால் தனது வான் எல்லைகளை ஈரான் மூடியது.
இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தங்களால் இயக்கப்படும் சில விமானங்களை ஏா் இந்தியா நிறுவனம் திசை திருப்பியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஏா் இந்தியா (ஏஐ)130- லண்டன் ஹீத்ரோ-மும்பை விமானம் ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவுக்கு திருப்பிவிடப்பட்டது. ஏஐ 102-நியூ யாா்க்-தில்லி விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷாா்ஜா நகருக்கும், ஏஐ 116 நியூயாா்க்-மும்பை விமானம் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளது. ஏஐ106 நெவாா்க்-தில்லி விமானம் வியன்னாவுக்கு திருப்பிவிடப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டது.
இதேபோல், இண்டிகோ நிறுவனமும் தனது விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:22 am
போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய உத்தரவு
June 13, 2025, 10:05 pm
காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் கேட்ட 21 பண்டிதர்கள் கைது
June 13, 2025, 9:50 pm
ஏர் இந்தியா 171 விமானத்தின் கருப்பு பெட்டி சிக்கியது: அடுத்தது என்ன?
June 13, 2025, 5:22 pm