நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் கேட்ட 21 பண்டிதர்கள் கைது

புது டெல்லி:

காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் கேட்ட 21 போலி பண்டிதர்களை உத்தர பிரதேச போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் சிறப்பு தரிசனம் செய்து வைப்பதாக கூறி பக்தர்களிடம் ரூ.1,000 முதல் ரூ.5,000 பெற்று மோசடி செய்துள்ளனர்.

பிரதமர் மோடியின் தொகுதியான வாராணசியில் அமைந்துள்ள இக்கோயில் பல ஆயிரம் கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.

அப்படி காத்திருப்போரிடம் சிலர் தங்களை கோயிலின் அதிகாரபூர்வ பண்டிதர்கள் என அருமுகப்படுத்தி ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை பெற்று சிறப்பு தரிசனம் செய்து வைப்பபதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய வாராணசி போலீஸார் இதுவரை 21 போலி பண்டிதர்களை கைது செய்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset