
செய்திகள் இந்தியா
காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் கேட்ட 21 பண்டிதர்கள் கைது
புது டெல்லி:
காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் கேட்ட 21 போலி பண்டிதர்களை உத்தர பிரதேச போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் சிறப்பு தரிசனம் செய்து வைப்பதாக கூறி பக்தர்களிடம் ரூ.1,000 முதல் ரூ.5,000 பெற்று மோசடி செய்துள்ளனர்.
பிரதமர் மோடியின் தொகுதியான வாராணசியில் அமைந்துள்ள இக்கோயில் பல ஆயிரம் கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
அப்படி காத்திருப்போரிடம் சிலர் தங்களை கோயிலின் அதிகாரபூர்வ பண்டிதர்கள் என அருமுகப்படுத்தி ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை பெற்று சிறப்பு தரிசனம் செய்து வைப்பபதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய வாராணசி போலீஸார் இதுவரை 21 போலி பண்டிதர்களை கைது செய்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am