நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஏர் இந்தியா 171 விமானத்தின் கருப்பு பெட்டி சிக்கியது: அடுத்தது என்ன?

புது டெல்லி:

அகமதாபாத்தில் 241 பயணிகள் உயிரிழந்த ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு மீட்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் விமான நிலையத்துக்கு ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ள பி.ஜே. மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி மீது இந்த விமான மோதி வெடித்து சிதறியது.

இதற்கு அந்த விமானத்தில் இருந்த 1.25 லட்சம் லிட்டர் விமான எரிபொருள் பெரும் காரணமாக அமைந்தது.

இதனால் விடுதியில் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த 5 மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர், மருத்துவரின் மனைவி என 10 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கல்லூரி வளாகத்தில் சிதறிய விமானப் பாகங்களில் இருந்து கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
விமானத்தின் வால் பகுதியில் கருப்பு பெட்டி பொருத்தப்பட்டு இருக்கும். விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள் அனைத்தும் இதில் பதிவாகும். கருப்புப் பெட்டி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முழுமையாக விசாரணைக்கு பிறகு விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், விமானத்தின் லேண்டிங் கியர் கோளாறு காரணமாக விமான சக்கரம் ஏதாவது கட்டிடம் மீது மோதியிருக்கலாம். விமான என்ஜினில் பறவைகள் மோதியிருக்கலாம். விமான என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற காரணங்களால் விபத்து நேரிட்டிருக்க வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கி உள்ளது. இந்தியா கேட்டுக்கொண்டால்

விசாரணைக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று அமெரிக்க விமான போக்குவரத்து துறை (எஃப்ஏஏ) தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset